search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரூரில் மதுபாட்டில்கள் விற்பனை"

    அரூர் அருகே கோவில் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்த 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.

    இந்த திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு விற்பனை செய்ய ஒரு பெண் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் நேரில் சென்று ஏ.பள்ளிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கல்யாணி (வயது 62) என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×